மழை குறைந்து வருவதன் காரணமாக இன்று வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாகநேற்றுதமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி புயல் நகர்ந்து சென்றதைத் தொடர்ந்து மழை குறையும் என கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக வேலூரில் இன்று விடுமுறை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.