திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள காத்தாங்கன்னி பகுதியில், விவசாயி நாகராஜ் தனது 35 ஆடுகள் கொட்டகைக்குள் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்து கிடந்ததால், பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் உற்று நோக்குகையில்  இரவில் வெறிநாய்களால் ஏற்ப்பட்ட தாக்குதல் என்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 2.50 லட்சம்.

மேலும் இந்த அதிர்ச்சிகரமான காட்சியைக் கண்டறிந்ததும், காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டார். இதை தொடர்ந்து முறையான அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, வருவாய்க் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு விரிவான விசாரணை நடத்தி வருவதுடன்,  கங்கயம் பகுதியில் கால்நடைகளைத் தாக்கும் வெறிநாய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.