வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.