பொங்கலை முன்னிட்டு பல்வேறு ஊர்களிலும் வித்தியாச வித்தியாசமான போட்டிகள் வைப்பது வழக்கம். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் தைப்பொங்கலை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பேனர் அடித்து விளம்பரம் செய்த வாண்டான் விடுதியை சேர்ந்த கணேஷமூர்த்திய போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அந்த விளம்பரத்தில் ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் அந்த போட்டியில் ஒரு நபர் 60 நிமிடங்களில் 10 பீர் பாட்டில்களை காலி செய்ய வேண்டும் எனவும், வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடித்த பீர்-க்கு பணம் குடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.