தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாகை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற ஜனவரி எட்டாம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐடிஐ பயிற்சி பெற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறலாம். இதில் கலந்து கொள்ள வரும் இளைஞர்கள் தங்களது புகைப்படம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். இந்த வேலை வாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் விவரங்களை அறிய 04365-250126 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.