ஸ்ரீபெரும்புதூர் அருகே 10 வகுப்பு மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ஜெயஸ்ரீ(15) மொளச்சூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மதிய உணவு இடைவேளையில் இவரும் இவரது தோழி ஏகவள்ளியும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது சாப்பாட்டில் ஜெயஸ்ரீ எலிமருந்தை கலந்துள்ளார்.

ஏன் என கேட்டதற்கு வீட்டில் என்னை திட்டிக்கொண்டே உள்ளனர் எனவே நான் சாகப்போகிறேன் என கூறி அதனை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து அதனை ஏகவள்ளியும் சாப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் இருவரும் நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.