பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஈடு செய்யும் வகையில் ஜன.6ஆம் தேதி பணி நாளாக இருக்கும். அதேபோல், படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடு செய்ய ஜன. 6ஆம் தேதி பணி நாளாக இருக்கும்.