தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 22ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 22ஆம் தேதி வெளியிட அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.