தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12 அதாவது இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடத்தப்பட உள்ள நிலையில் காலை 8:30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை அனைத்து கல்வித்தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம் எனவும் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதால் தற்போது வேலை தேடி வரும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய என்றால் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது