கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுபிஷா தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் பள்ளியில் மாத தேர்வு நடைபெற்றதில் சுபிக்ஷா குறைந்த மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் சுபிஷாவின் பெற்றோரை அழைத்து மதிப்பெண்கள் குறைவாக வாங்கியது குறித்து தெரிவித்தனர்.

இதனால் வீட்டிற்கு வந்த பெற்றோர் சுபிஷாவை கண்டித்தனர். அதனை நினைத்து மன உளைச்சலில் இருந்து சுபிஷா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது