சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இதை விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 6ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் அதனைப் போலவே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.