மிக்ஜாம் புயலில் கடுமையாக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு முதல்வர் ரூ.4000 வழங்கினார். மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கினாலும், தூய்மை பணியாளர்கள் 24 மணி நேரமும் கடுமையாக உழைத்தனர். இதையடுத்து அவர்களை பாராட்டும் வகையில் பேரிடர் பணியில் சிறப்பாக செயல்பட்ட 3,429 பணியாளர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கினார்.

முன்னதாக சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் மா.சு., பிரியாணி விருந்து அளித்து கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களிலும் தூய்மை பணியார்கள் பாரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.