தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் அணிய வேண்டும் எனவும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தொற்று எண்ணிக்கை 500- ஐ கடந்தால் முக கவசம் கட்டாயமாக படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 400- ஐ கடந்த நிலையில் இன்று அல்லது நாளை பாதிப்பு எண்ணிக்கை500-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாஸ்க் கட்டாயமாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்