தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் இதுவரை 49 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதனால் இதை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளும் இருந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் மாளிகையில் கிடப்பில் கிடந்தது. ஆளுநருக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. இனி தேவையற்ற மரணங்கள் நடக்காமல் இருக்க தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.