அமுல் நிறுவனம் தற்போது வரை தமிழகத்தில் பால் பண்ணையை அமைக்கவில்லை என தமிழக பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமுல் நிறுவனம் ஆவினுக்கு போட்டியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் பால் விற்பனையை தொடங்கியதாக தகவல் வெளியானது. இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழக அரசு அப்படி எதுவும் நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது.