உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டிபி ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சையின் போது மாரடைப்பால் உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உரிய மருத்துவ வசதிகள் செய்த பிறகு மருத்துவமனையை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.