உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் நீலகிரிக்கு படையெடுத்து வருவதால் இந்த ஆண்டு மலர் கண்காட்சி கலைக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.