மரணம் அடைவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் முதல் நபராக ஆனந்தராஜா என்பவரை குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அவரது மரணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்னிடம் 200 கோடி சொத்து உள்ளது. 30 லட்சத்திற்காக அவரை கொலை செய்ய வேண்டிய அவசியமில்லை என விளக்கம் அளித்துள்ள ஆனந்தராஜா ,கடிதத்தில் தனது பெயர் இருந்ததால் மும்பைக்குச் சென்றதாக கூறினார்.