தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களை அலுவலக பணி போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை பள்ளியின் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் செய்து தர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.