தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பயனாளர்களின் வங்கி கணக்கில் நாளை காலை 10 மணிக்குள் வரவு வைக்கப்படும் என்ற தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஒரு ரூபாய் மற்றும் பத்து பைசா அனுப்பி வங்கி கணக்குகள் சோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று பலருக்கு ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக நாளை காலை 10 மணிக்குள் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் பணம் அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.