செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி நிகழ்ச்சியானது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இதனால் ரசிகர்கள் AR ரஹ்மான்  மீது கோபத்தில் உள்ளார்கள். இந்நிலையில், மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ACTC நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு கோரினார்.

இதனையடுத்து, ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் செலுத்த வேண்டிய 10% கேளிக்கை வரியை செலுத்தாததால் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அண்ணா நகரில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கியுள்ளனர்.