பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விநாயகர் சிலை வைக்கப்படும் பகுதியில் சீருடை பணியில் உள்ள காவல்துறையினர் சிலைகளை பாதுகாப்பாக இரவு பகலாக பணி செய்ய வேண்டி உள்ளது. இதெல்லாம் தேவையா சாதாரண ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்கி கொள்கிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சந்தூரில் புதிதாக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.