தமிழகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் குடியரசு தினம், உழைப்பாளர் தினம் மற்றும் சுதந்திர தினம் என மொத்தம் ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.