முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான வருகின்ற ஜூலை 15ஆம் தேதியை அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான வருகின்ற ஜூலை 15ஆம் தேதி அனைத்து விதமான பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

காமராஜரின் பணிகள் தொடர்பாக பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளை நடத்தி பரிசு வழங்க வேண்டும். இதற்கான செலவினங்களை பள்ளி வளர்ச்சி அல்லது ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நிதியில் இருந்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.