தமிழகத்தில் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டது. இதனால் நம்முடைய அன்றாட தேவையான சிலிண்டரை 15, 14 மாடி கட்டிடங்களில் ஏறி விநியோகம் செய்வதில் விநியோகஸ்தர்களுக்கு பெரும் சிக்கல் உள்ளது. இதனால் சோதனை முயற்சியாக சென்னையில் உள்ள சில குறிப்பிட்ட அடிக்குமாடி குடியிருப்புகளுக்கு பைப்லைன் மூலமாக இயற்கை சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த முறையானது சிலிண்டரை விட நல்ல ஒரு திட்டமாக இருப்பதால் மக்கள் நல்ல பலனை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. சென்னையை தொடர்ந்து  இரண்டாம் கட்டமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக கோவை சேலம், மதுரை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தினசரி நாம் பயன்படுத்தும் எரிவாயுவின் அளவே நம்முடைய வாட்ஸப் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும்.