தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது வரை மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் மிக கனமழை எதிரொடியாக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.