தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது அதனை தணிக்கும் விதமாக ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கனமழை காரணமாக இன்று நீலகிரியில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கேரளாவில் இடுக்கி, பாலக்காடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவா மாநிலத்தின் அனைத்து பள்ளிகள் மற்றும் கர்நாடகாவின் தக்ஷிண கன்னடாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது