சென்னை மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில்  நாளை முதல் ஒரு வருடத்திற்கு வாகனங்கள் அனுமதி கிடையாது என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை பக்கத்தில்  கடந்த சில மாதங்களாகவே மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது.  இதன் காரணமாகவே சென்னை மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லைட் ஹவுஸ் முதல் காந்தி சிலை வரையிலான சர்வீஸ் சாலையில் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.