தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்தவரை அனைத்து கல்வித் தகுதி கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.