ஈரோடு மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் கீழ்பவானி வாய்க்கால் கரைப்பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தை கையில் பால் புட்டியுடன் அழுது கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக குழந்தைக்கு அருகே விரைந்து சென்றனர். அந்த குழந்தை பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண் குழந்தையை மீட்டனர். அந்த குழந்தையின் பெற்றோர் யார்? குழந்தை எப்படி வந்தது? யாராவது கடத்தி சென்று வாய்க்கால் பகுதியில் குழந்தையை விட்டுவிட்டு தப்பி சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.