தமிழகத்தில் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை பல மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. மேலும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் அத்தியாவசிய பொருட்களை இப்போதே வாங்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.