தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் பல முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் பேசும்போது தன்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம் என திமுக உறுப்பினர்களுக்கு அறிவுரை விடுத்துள்ளார்.

திமுக உறுப்பினர் சாமுவேல் சட்டப்பேரவையில் புகழ்ந்து பேசியதை தடுத்து நிறுத்திய முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு அறிவுரை வழங்கினார். கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் பேரவையில் எம்எல்ஏக்கள் யாரும் தங்கள் தலைவரை புகழ்ந்து பேச வேண்டாம் என அமைச்சர் துரைமுருகன் முன்னதாக வேண்டுகோள் விடுத்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினும் தன்னை யாரும் புகழ வேண்டாம் என திமுக உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்