தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக, நேற்று தான் மின் நுகர்வு அதிகபட்சமாக 41.82 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது என்றும்  கூறியுள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 18/04/2023ல், 41.30 கோடி யூனிட்கள் ஆகும்.

மெகாவாட் அளவில், நேற்று மாநிலத்தின் மின் நுகர்வு தேவை 19,087 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச தேவை 18/04/2023ல் 18,882 மெகாவாட் என்று தெரிவித்துள்ளார்.