கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏனுசோனை கிராமத்தில் மனோகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரீஷ்மா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஹரீஷ்மா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரீஷ்மா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹரீஷ்மாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.