நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சந்திர சேகரபுரத்தில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபக்கின் செல்போன் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்து லிங்கை கிளிக் செய்து டாஸ்கை வெற்றி பெற்றதால் தீபத்தின் வங்கி கணக்கிற்கு பணம் வந்தது.

இதனை நம்பி தீபக் 1 லட்சத்து 71 ஆயிரத்து 939 ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். அதன் பிறகு லாபமும் வரவில்லை. அவர் கட்டிய பணமும் திரும்ப வரவில்லை. இதுகுறித்து தீபக் நாமக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.