கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரத்தில் சிற்றரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் சிற்றரசு தனது தாய் திலகத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மேட்டு குடியிருப்பு லட்சுமிபுரத்தில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் விபத்தில் சிக்கி சிற்றரசின் காலில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் நடக்க முடியாமல் சமீப காலமாக சிற்றரசு சிரமப்பட்டு வந்தார்.

ஏற்கனவே பிள்ளைகளை பிரிந்த கவலை தற்போது நடக்க முடியாமல் அவதி என அடுத்தடுத்த கஷ்டங்களை அனுபவித்த சிற்றரசு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிற்றரசுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.