கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூரில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சங்கரின் தந்தைக்கும், அதே பகுதியில் வசிக்கும் திலகராசன் என்பவரது தந்தைக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது திலகரசன் தரப்பினர் சங்கரை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.

இதனால் காயமடைந்த சங்கர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திலகரசன் மற்றும் அவரது தம்பி நவீன் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.