மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பு விவரங்கள், இதர விவரங்கள் முழுதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக பொங்கல் பண்டிகை வேட்டி-சேலைகள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்ததை பார்த்த சிலர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த கட்டிடத்தில் இப்போது தான் மின்வயர்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளது என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 29 ஆயிரம் சேலைகளும், 12,500 வேட்டிகளும் எரிந்து நாசமானது. இது தவிர சேதமான பிற பொருட்கள் மற்றும் நாற்காலிகளின் விலை குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது.