சென்னையில் குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் ஆறாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பெருங்குடி டெலிபோன் நகரில் நான்கரை லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று உள்ளது.

இந்த தண்ணீர் தொட்டியின் பிரதான குழாயில் நேற்று திடீர் உடைப்பு ஏற்பட்டதால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதிகப்படியான தண்ணீரால் டிரான்ஸ்பார்மர் ஒன்று வெடித்து சிதறி சாய்ந்துள்ளது.