ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கிராமம் ஒன்றில் அமைந்துள்ள கிணற்றில் இருக்கும் நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். தண்ணீரை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அருகே எந்த தொழிற்சாலைகளும் இல்லாத நிலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிப்காட் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு அடைந்திருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.