சென்னை திருவெற்றியூர் கடற்கரைச் சாலை கல்யாண செட்டி நகரைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி சங்கீதா. இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறுமாத காலமாக குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து வீட்டில் சிசிடிவி கேமரா பொறுத்தியுள்ளனர். அதில் திடுக்கிடும் வகையில் பக்கத்துக்கு வீட்டுக்காரரான எல்லப்பன் என்பவர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீட்டுக்குள் வந்து ஒரு பக்கெட்டை எடுத்துச் சென்று வெளியில் வைத்து மலத்தையும், சிறுநீரையும் கலந்து அதை, சங்கீதா வீட்டின் குடிநீர்த் தொட்டியில் ஊற்றுவது தெரியவந்தது.

இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்த விசாரணையில் பல வருட பகையின் காரணமாக இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது.