சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆலம்பட்டு – குருந்தம்பட்டு கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பலரும் கலந்து கொண்டார்கள்.

மேலும் மத ஒற்றுமையைப் போற்றும் வகையில், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, கல்லல் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். தேங்காய், பழத்துடன் சீர்வரிசைப் பொருட்களை இந்து பெண்கள் கொண்டு வர அதைப் பெற்றுக்கொண்டு அவர்களை முஸ்லிம் பெண்கள் வரவேற்றனர்.