பல்லாவரம் MTC  பேருந்து நடத்துனர்களுக்கு பயணிகள் டிஜிட்டல் முறையில் பயண கட்டணம் செலுத்தும் வகையில் புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. சோதனை முயற்சியாக களமிறக்கப்பட்டுள்ள இந்த திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களில் மக்கள் பயணிக்கும் இடத்தை தேர்வு செய்து பின்னர் UPI, பணம், கார்டுகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. UPI முறையை தேர்வு செய்தால் திரையில் தோன்றும் QR Code-ஐ ஸ்கேன் செய்து பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.