உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் புதிய அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இன்ஸ்டா டெக்ஸ்டை மையமாகக் கொண்டுஒரு புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் பயனர்கள் 1500 வார்த்தைகள் வரை டைப் செய்ய முடியும் என்றும் புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் இணைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய அம்சம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த அறிவிப்பு இன்ஸ்டாகிராம் பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.