பிரபல சமூகவலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் மக்கள் தங்களது மனதில் நினைக்கும் கருத்துக்களை உடனுக்கு உடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது. எனினும் இன்ஸ்டாகிராமில் படங்களும் ரீல்ஸ் போன்றவைகளும் அதிகம் பகிரப்படுகிறது. ஆகவே பயனர்களின் வசதிக்காக மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் இந்த புது வசதிகளை அறிமுகம் செய்ய விரும்புகிறது.

பேஸ்புக், டுவிட்டர் பயனர்களுக்கு தேவையான புது வசதிகளையும் அவ்வப்போது அந்நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதிலிருந்து அதன் போட்டியாளரான மெட்டா நிறுவனம் பல அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் ஆரம்பகட்ட முயற்சியில் இன்ஸ்டாகிராம் நிறுவன நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த புது செயலி வாயிலாக பயனர்கள் 1,500 வார்த்தைகள் வரை டைப் செய்ய முடியும் எனவும் லிங்குகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் மெசேஜ் செய்யக்கூடிய அம்சம் இருந்தாலும் படங்கள், வீடியோக்கள் பதிவேற்றும் செயலியாகவே பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்த நிலையில் டுவிட்டர் போன்று செய்திகளை பகிரும் புது தளத்தை உருவாக்க இன்ஸ்டாகிராம் இறங்கி இருக்கிறது. இந்த புது செயலி வருகிற ஜூன் மாதம் அறிமுகப் படுத்தப்படும் எனவும் தகவல் தெரிவிக்கிறது.