புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுடலைகொல்லையில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சுப்பிரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். டிரைவரான சுப்பிரமணியன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.