சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடி அருகே கனககிரி பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக வேலை பார்க்கும் கந்தசாமி என்பவர் மது வாங்க வருபவர்களிடம் மதுபாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கந்தசாமி கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தது உறுதியானது. இதனால் அதிகாரிகள் கந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.