சேலம் மாவட்டத்திலுள்ள வேப்பமரத்தூரில் விசைத்தறி தொழிலாளியான சின்னமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கந்தாயி அப்பகுதியில் இருக்கும் சத்துணவு கூட்டத்தில் சமையலராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் சின்னமுத்து தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை அலுவலர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த சின்னமுத்து போலீசார் தன்னிடம் விசாரணை நடத்துவார்கள் என்ற அச்சத்தில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சின்ன முத்துவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.