இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மக்களுக்கு அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் பண பரிவர்த்தனைகள் என்பதை மிகவும் எளிதாகி விட்டது.

அதேசமயம் அதன் மூலம் நடைபெறும் ஏமாற்று வேலைகளும் அதிகமாகிவிட்டன. சமீபகால மோசடியாக உங்கள் அக்கவுண்டில் பணம் செலுத்தப்பட்டு விட்டது என்ற மெசேஜ் வருகிறது. அதோடு மேலும் தகவல்களுக்கு ஒரு லிங்க் வருகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்கள் பணம் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்படும் அபாயம் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.