தமிழகத்தில் அதீத கனமழையால் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க டிசம்பர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 31ஆம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்கும். மழை நிவாரணமாக 6000 ரூபாய் பெற டோக்கன் தரப்படுவதால் அந்த தொகையை பெற ஏதுவாக ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது